கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து கோவை அருகே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 32 பயணிகள் காயம்

கோவை நீலாம்பூர் அருகே பெங்களூரு நோக்கி சென்ற ஆம்னி பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பயணிகள் 32 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கோவை: கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு, கோவை வழியாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி சென்றுள்ளது. அந்த பேருந்தில், 37 பயணிகள் மற்றும் ஓட்டுனர், கிளீனர், உதவியாளர் என 40 பேர் பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து கோவை புறவழி சாலையில் நீலம்பூர் அருகேயுள்ள வெங்கடாபுரம் பிரிவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், துரதிஷ்டவசமாக ஆம்னி பேருந்தானது, சாலையோரம் இருந்த சிறிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த பயணிகள், ஓட்டுநர் உட்பட 32 பேர் காயமடைந்தனர்.

இதில், 14 பேர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சிறிய காயங்கள் அடைந்தவர்கள் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில், விபத்து நிகழ்ந்த இடத்தில், சூலூர் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...