கோவையில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி மோசடி - தனியார் நிறுவன இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.3 கோடி அபராதம்….!

வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி 65 பேரிடம் மோசடியில் ஈடுபட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநர் ஜெகதீஸ்வரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து டேன்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.


கோவை: கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன் எலக்ட்ரிசியன். இவரது மனைவி கீதாராணி. கடந்த 2017 -ல், பேரூர் காளாம்பாளையம் பகுதியில் செயல்பட்ட தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை, மனை வாங்க கீதாரணி அனுகியுள்ளார். அப்போது, அந்த நிறுவனத்தினர், வாடகை விலையில் சொந்த வீடு வாங்கலாம் என்ற திட்டத்தின் கீழ் இணையுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய கீதாராணி, இரண்டு தவணைகளாக ரூ.6.30 லட்சம் பணத்தை நிறுவன நிர்வாக இயக்குநர் ஜெகதீஸ்வரனிடம் கொடுத்துள்ளார். இதற்காக, தீத்திபாளையம் பகுதியில் இடத்தையும் வழங்கியுள்ளனர். அங்கு கீதாராணி குடும்பத்தினர் பூமி பூஜை போட்டு பணிகளை துவங்க இருந்த நிலையில், அதே இடத்தில் இரண்டு நாட்கள் கழித்து வேறு ஒருவர் பூமி பூஜை போட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த கீதாராணி, அவர் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததை அடுத்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், பணத்தை திருப்பிக் கொடுப்பதாக கூறி, இரண்டு காசோலைகளில் ரூ.6.30 லட்சம் பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர்.

அதை வங்கியில் செலுத்திய போது, போதிய பணம் இல்லாததால் காசோலை பவுன்ஸ் ஆகியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட கீதாராணி, பேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர், வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அந்நிறுவன இயக்குநர் ஜெகதீஸ்வரன், விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகியோர் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து விசாரணையில் இதேபோல 65 பேரிடம் சுமார் ரூ.3.03 கோடி வரை ஏமாற்றியது தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை கோவை டேன்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், முக்கிய குற்றவாளியான ஜெகதீஸ்வரனுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.3 கோடி அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் இருந்து, விஜயகுமார், முகமது ரபீக், உமாதேவி ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...