கோவை மலுமிச்சம்பட்டியில் டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை - 2 பேர் கைது, 3 பேர் நீதிமன்றத்தில் சரண்…!

கடந்த திங்கட்கிழமை மலுமிச்சம்பட்டியில் நண்பர்களுடன் டாஸ்மாக் கடைக்கு சென்று விட்டு வரும் வழியில், ஐந்து பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் பிரபாகரன் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த மூவர் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.


கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில் தொழிலாளி அடித்துக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது, தலைமறைவாக இருந்த 3 பேர் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கோவை மலுமிச்சம்பட்டி அன்பு நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (39). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த திங்கட்கிழமை தனது நண்பர்களான ஞானபிரகாஷ், தமிழ்செல்வன் ஆகியோருடன் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றுள்ளார்.

அப்போது பிரபாகரனுக்கும், அங்கு மது குடிக்க வந்த 5 இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரபாகரன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பின் தொடர்ந்து வந்து 5 இளைஞர்களுடன் பிரபாகரனை வழி மறித்து மட்டை மற்றும் சிமெண்ட் கல்லால் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த பிரபாகரன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வந்தனர்.

முன்னதாக டாஸ்மாக் கடையில் விசாரணை செய்த போது அந்த இளைஞர்கள் மது வாங்கிவிட்டு இணைய தளம் (கூகுள் பே) மூலம் மது பாட்டில்கள் வாங்கியது தெரியவந்தது. அதில், கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

விசாரணையில், பரமகுடியை சேர்ந்த சந்திரசேகர் (23), மணிகண்டன் (19) ஆகிய இருவரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி தனிப்படை போலீஸார் திருப்பூர் சென்றனர். இந்நிலையில், தொழிலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கோவை சிங்காநல்லூர் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றி வந்த பரமகுடியை சேர்ந்த மணிகண்டன் (27), கரன் என்கிற கார்த்திகேயன் (24), முனீஸ்வரன் (27) ஆகிய மூன்று பேர் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சரணடைந்த மூவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...