கோவையில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் நடைபெற்ற வால்வ் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கு

அவிநாசி சாலையில் சிஐஐ சார்பில் நடைபெற்ற வால்வ் தொழில்நுட்ப கருத்தரங்கில், இந்திய வால்வ் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பிரனை எஸ்.கார்க், சிஐஐ-யில், இயந்திர மனித பயன்பாடு, அறிவு சார்ந்த உற்பத்தி அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.



கோவை: இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் வால்வ் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பிரசாந்த் சுப்பிரமணியன் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். இதனை தொடர்ந்து பேசிய கருத்தரங்க தலைவர் ரமேஷ் பாபு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்த, இந்திய வால்வ் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரனை எஸ்.கார்க் பேசியதாவது, மாறி வரும் காலம், தேவைகளுக்கு ஏற்ப உலக சந்தையில் சிறந்து விளங்கும் நோக்கில் இந்திய வால்வ் தொழில் நிறுவனங்களில் இயந்திர மனித பயன்பாடு அதிகரித்துள்ளது.

அறிவு சார்ந்த உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்த கருத்தரங்கில் பங்கேற்ற வல்லுநர்கள், பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இறுதியாக சிஐஐ கோவை துணை தலைவர் செந்தில் கணேஷ் நன்றியுரையாற்றினார்.

Newsletter

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...