கோவை செஞ்சேரி மலையில் வரும் டிச.14ல் தென்னை உழவர்கள் மாநாடு - தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு

கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை ரூ.150ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 14ஆம் தேதி கோவை செஞ்சேரி மலையில் தென்னை உழவர்கள் மாநாடு நடைபெற உள்ளது.



கோவை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக வருகிற 14ஆம் தேதி கோவை மாவட்டம் செஞ்சேரி மலையில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருப்பூர் அகத்தியன் வீதியில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் முருகசாமி செய்தியாளர்களை சந்திப்பில் பேசியதாவது, மத்திய அரசு கொப்பரை கொள்முதல் விலையை 105.90 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.

கொப்பரை கொள்முதல் ஏக்கர் ஒன்றுக்கு 285 கிலோவில் இருந்து 500 கிலோவாக உயர்த்த வேண்டும். கேரளாவை போல தமிழ்நாடு அரசு உழவர்களிடம் நேரடியாக உரித்த தேங்காயை டன் ஒன்றிற்கு 40,000 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும்.

பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தென்னை உழவர்களின் பல்வேறு கோரிக்கைகள் இந்த மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த மாநாட்டில் ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்க அமைப்பினர் கலந்து கொள்ள உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...