கோவையில் ஈஷா சார்பில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் - 600க்கும்‌ மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்

ஈஷாவின் 'ஆரோக்கிய அலை' அமைப்பின் சார்பில் கோவையில் கடந்த டிச.4-ல் மத்வராயபுரத்திலும், டிச.5 ஆம் தேதி ஆலாந்துறையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்களில் பழங்குடி மக்கள் உட்பட சுமார் 600 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


கோவை: கிராமப்புற ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும்‌ நோக்கத்தில்‌, ஈஷா அமைப்பின் “கிராமப்‌ புத்துணர்வு” இயக்கத்தின்‌ “ஆரோக்கிய அலை” அமைப்பானது, முன்னணி மருத்துவமனைகளுடன்‌ இணைந்து கோவை மாவட்டத்தில்‌ பல்வேறு விதமான இலவச மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.



அதன்‌ ஒரு பகுதியாக, கடந்த டிசம்பர்‌ 4-ம்‌ தேதி மத்வராயபுரத்தில்‌ உள்ள அரசு மேல்நிலைப்‌ பள்ளியிலும்‌, டிசம்பர்‌ 5-ம்‌ தேதி ஆலாந்துறையில்‌ உள்ள ஈஷா கிராம மருத்துவமனையிலும்‌ பல்துறை இலவச மருத்துவ முகாம்‌ நடைபெற்றது.



இதில்‌ ஆலாந்துறை, செம்மேடு, இருட்டுப்பள்ளம்‌, மடக்காடு, தொண்டாமுத்தூர்‌, பூலுவப்பட்டி, தொம்பிலிபாளையம்‌ உட்பட பல்வேறு கிராமங்களைச்‌ சேர்ந்த பொதுமக்கள்‌ பங்கேற்று இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்‌.

இதில், இருதயம்‌, கண்‌, காது, மூக்கு, தொண்டை, எலும்பு, தோல்‌, பல்‌, நரம்பு, பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ நல மருத்துவம்‌ என ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும்‌ சிறப்பு மருத்துவர்கள்‌ பங்கேற்று மருத்துவ ஆலோசனைகளை‌ வழங்கினர்‌.

குறிப்பாக, கண்‌ புரை பாதிப்பு கண்டறியப்பட்ட 43 நோயாளிகளுக்கு அரவிந்த்‌ கண்‌ மருத்துவமனையில்‌ கண்‌ புரை நீக்க அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது.

மேலும்‌, முகாமின்‌ சிறப்பம்சமாக, இருதய நோயாளிகளுக்கு எக்கோ பரிசோதனை, மகளிருக்கான கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக புற்றுநோய்‌ கண்டறியும்‌ பரிசோதனை, காது கேட்கும்‌ திறனுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள்‌ இலவசமாக செய்து கொண்டனர்‌. இதுதவிர அனைத்து மருந்துகளும்‌ இலவசமாக வழங்கப்பட்டன.

இந்த 2 நாள்‌ மருத்துவ முகாமானது,‌ கோவை அரவிந்த்‌ கண்‌ மருத்துவமனை, வெள்ளியங்கிரி உழவன்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்‌, கங்கா மருத்துவமனை, கோவை ரோட்டரி மெட்ரோபொலிஸ்‌ சங்கம்‌ ஆகிய அமைப்புகளுடன்‌ இணைந்து நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...