கோவை கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 8 பேரை கைது செய்த போலீசார்..!

கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10,700 பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்த நிலையில், 8 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் சிலர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவது தெரியவந்தது.

இதனையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்த வடவள்ளியைச் சேர்ந்த சிவானந்தன், மணிகண்டன், செந்தில்குமார், பாபு, ரத்தினபுரியைச் சேர்ந்த கனகராஜ், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜா, செல்வக்குமார் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 10,700 ரூபாய் பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...