கோவை லாலி ரோடு சிக்னல் அருகே குடிநீர் பதிக்க தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கியது

சாலையில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால் அரசு பேருந்தின் சக்கரங்கள் குழியில் சிக்கியது. பேருந்தில் இருந்து அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டுள்ள நிலையில், பேருந்தை குழியில் இருந்து மீட்க போக்குவரத்து துறை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை தடாகம் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்ட நிலையில், அவை சரிவர மூடப்படாததால் அரசு பேருந்து சக்கரம் சிக்கியது.



பேருந்தில் இருந்து அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டுள்ள நிலையில், பேருந்தை குழியில் இருந்து மீட்க போக்குவரத்து துறை ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



இதே போல, அந்த வழியாக வந்த வேன் உட்பட சில வாகனங்களும் அடுத்தடுத்து அந்த குழியில் சிக்கிக்கொண்டது. அவற்றை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

இந்த சாலையில், குடிநீர் குழாய் அமைக்க குழிகள் தோண்டப்பட்டு சரி வர மூடப்படாததால், அடிக்கடி இவ்வாறு வாகனங்கள் சிக்கி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், குழாய்கள் பதிப்பதற்காக மற்றும் இதர பணிகளுக்காக சாலைகளில் தோண்டப்படும் குழிகள் தரமான முறையில் மூடப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...