சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சமூக நீதிக் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சூயஸ் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுவதால், சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிந்துரைக்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் மனு.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் விநியோகம் சூயஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.



இந்நிலையில் இதனை ரத்து செய்யக்கோரி சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அவரது மனுவில், கோவை மாநகராட்சியின் 78 மற்றும் 79 ஆகிய வார்டு பகுதிகளில் சூயஸ் குடிநீர் குழாய் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய் இணைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் துண்டித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக குடிநீர் விநியோக ஒப்பந்த உரிமையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



மனு அளிக்க வந்தவர் மாதிரி குடிநீர் குழாய் மற்றும் கண்டன பதாகைகளை கையில் ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...