கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 10 சவரன் கொள்ளை - மர்ம பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ஈரோட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணிடம் இருந்த 10 சவரன் நகையை மற்றொரு பெண் திருடிச்சென்றதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் யுக மூர்த்தி. இவரது மனைவி ஜெயகீதா கோவையில் உள்ள அவரது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.

இதற்காக அவர் சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு வந்த பேருந்தில் பயணித்துள்ளார். உடன் தனது மகளையும் அவர் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிலையில் அவர் செல்வபுரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று உடமைகளை சோதனை செய்துள்ளார்.

அப்போது அவரிடம் இருந்த 10 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தாங்கள் வந்த பேருந்தில் தங்களது இருக்கையில் மற்றொரு பெண் அமர்ந்திருந்ததாகவும், அவர் அன்னூரில் இறங்கியதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அந்த பெண் தங்களது பையை நோட்டமிட்டதாகவும், அவரே நகையை திருடி சென்றிருக்கலாம் எனவும் ஜெயகீதா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செல்வபுரம் போலீஸார் பேருந்தில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 10 சவரன் நகையை மற்றொரு பெண் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...