கோவையில் காவல் உதவி ஆய்வாளர் போல வேடமிட்டு வாகன தணிக்கையில் ஈடுபட்ட நபர் கைது…!

ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்த செல்வம், உதவி ஆய்வாளர் போல் போலியாக சீருடை அணிந்து கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்தது.


கோவை: கோவை கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான ஜான்சன் கல்லூரி அருகே உள்ள சர்வீஸ் சாலையில் கருமத்தம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது, அவரை நிறுத்திய காவல்துறை உடையில் இருந்த ஒரு நபர், தான் உதவி ஆய்வாளர் என்று கூறி சோதனை செய்துள்ளார். அப்போது, அவர் மீது சசிகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், காவல் நிலையத்திற்கு வந்து இது குறித்து தகவல் அளித்துள்ளார்.



இதையடுத்து, கருமத்தம்பட்டி உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ரோந்து சென்று பார்த்த போது, புல்லட் வாகனத்தில் உதவி ஆய்வாளர் சீருடையில் வந்த நபரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

அப்போது, அவர் போலி உதவி ஆய்வாளர் என்பது தெரியவந்தது.

விசாரணையில், அவர் விருதுநகர் மாவட்டம் திம்மன்பட்டியை சேர்ந்த சேர்ந்த செல்வம் (39) என்பதும், தற்சமயம் கருமத்தம்பட்டியில் தங்கி தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்ததும், தொடர் விசாரணையில், செல்வம் உதவி ஆய்வாளர் போல் போலியாக சீருடை அணிந்து கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்வது போல் மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் உதவி ஆய்வாளர் எனக் கூறி ஒரு பெண்ணை திருமணம் செய்ததோடு, தான் தற்போது தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரிடமும் போலீஸ் எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். மில்லுக்கு வேலைக்கு செல்லும் போது மட்டும் உடையை மாற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

இதையடுத்து, செல்வத்தை அழைத்துச் சென்ற போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...