உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு பேரணி - 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பு

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, கோவையில் மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.



கோவை: ஒவ்வோரு ஆண்டும் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மாற்று திறனாளிகள், சம உரிமை, வாய்ப்புகளுடன் வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இந்நாளில், மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டும் மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை அங்கீகரித்து விருதுகளும் வழங்கப்படும்.

அதன்படி, இன்று கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கோவை மாவட்ட அனைத்து வகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் இணைந்து சமூக விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்த பேரணியானது, மாற்றுத்திறனாளிகள் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் ஏற்படுத்துதல், அனைத்து வகையான தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, சக்கர நாற்காலி வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரக்கூடிய வசதிகளை ஏற்படுத்துதல், ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்ற இந்த பேரணியை கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த ராம் குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அவர்களது வாகனங்களிலும் 50க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் நடைபயணமாகவும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

மேலும் யங் இந்தியன் அமைப்பினர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயமுத்தூர், ரோட்டரி கிளப் ஆஃப் அக்ருதி, ரோட்டரி கிளப் ஆஃப் காஸ்மோபொலிடன் உட்பட பல்வேறு NGO அமைப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஜோதியானது, யங் இந்தியன் அமைப்பினரிடம் வழங்கப்பட்டது. பேரணியின் இறுதியில் மாற்றுத்திறனாளிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...