தனியார் வங்கி, நிதி நிறுவனங்களை கண்டித்து கோவையில் சிஐடியு ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், கடன் தொகையை செலுத்த தவறினால், அடியாட்களை வைத்து மிரட்டுவது, ஆட்டோவை தூக்குவது போன்ற செயல்களை தடுக்க வேண்டும்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சிஐடியு ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு தனியார் வங்கி, மற்றும் நிதி நிறுவனங்கள் அதிகப்படியான அபராதங்களை வசூலிப்பதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா காலங்களில் EMI தொகையை வசூலிக்க வேண்டும். கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாவது அலை என எட்டு மாதங்களில் நான்கு மாதங்களையாவது தள்ளுபடி செய்ய வேண்டும்.

தனியார் வங்கி மற்றும் கடன் நிறுவனங்கள் 47 மாதம் கட்ட வேண்டிய நிலுவை தொகைக்கு 64 மாதமாக கட்ட சொல்லி வலியுறுத்துகின்றன. 13.5% வட்டியை 24.24% கட்ட வேண்டும் என நிர்பந்திக்கின்றன. கடன் தொகையை செலுத்த தவறினால் ஒரிரு நாள் தாமதமாக கட்டினாலோ ஆபாச வார்த்தைகளில் பேசுகின்றனர்.

அடியாட்களை வைத்து மிரட்டுவது, ஆட்டோவை தூக்குவது போன்ற செயல்களில் தனியார் நிதி நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தனியார் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...