கோவை அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கு-தேடப்படும் குற்றவாளியாக முஜிபூர் ரஹ்மான் அறிவிப்பு

கோவை கிளாசிக் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முஜிபூர் ரகுமான் என்பவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த கோவை குற்றவியல் நீதிமன்றம் டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.


கோவை: கோவை அரசு மருத்துவமனை எதிரில் உள்ள கிளாசிக்கார்டன் குடியிருப்பின் கார் பார்கிங் பகுதியில் கடந்த 1997-ம்ம ஆண்டு மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டை வைத்து விட்டு தப்பிச்சென்றனர்.

ஆனால் குடியிருப்பின் காவலாளி அந்த வெடி குண்டு பேக்கை பார்த்துவிட்டு உடனடியாக அதை வெளியே உள்ள குப்பை தொட்டியில் வைத்து விட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 10 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். பின்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணையின் முடிவில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு தற்போது இவ்வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கில் 11 ஆவது குற்றவாளியான ஷாஜகான் மற்றும் 12 ஆவது குற்றவாளியான முஜிபூர் ரகுமான் ஆகிய இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்படி ஷாஜகானை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு தற்போது பிணையில் இருந்து வருகிறார்.

ஆனால் 12-வது குற்றவாளியான போத்தனூரை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்பவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 23-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அவரது வீடு மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாரால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...