கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமைதிக்கும் குந்தகம் ஏற்படும்படியாக பதிவிட்டு கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை, இன்று ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபினின் இறுதி சடங்குகள் நடத்த ஜமாத்துகள் மறுத்த செய்திகளை மையமாக வைத்து அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வலதுசாரி ஆதரவாளரான கிஷோர் கே.சாமி மீது, கோவை சைபர் கிரைம் போலீசார் சட்ட பிரிவு 153-ன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறாக செய்தி பதிவிட்ட வேறொரு வழக்கில் கிஷோர் கே.சாமி ஏற்கனவே சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோவை மாவட்ட 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் கிஷோர் கே சாமி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கிஷோர் கே சாமியை இன்று ஒரு நாள் (நவ 28) காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற் பரிசோதனை செய்தனர். பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...