சூடான் நாட்டு நோயாளிக்கு வாழ்வளித்த கேஎம்சிஎச்


சூடான் நாட்டைச் சேர்ந்த 42 வயதான முகமது அப்துல்ரெஹ்மான், இருதய நோய்க்கு சரியான சிகிச்சை பெற, இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களுக்கு நல்ல மருத்துவமனையை தேடி ஆறு மாதங்களாக அலைந்து கொண்டிருந்தார்.



இறுதியாக அவரது நண்பரின் அறிவுரையை ஏற்று, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு 2017 ஜனவரி முதல் வாரத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இங்கு மேற்கொள்ளப்பட்டது.

நியாயமான கட்டணத்தில் குறுகிய கால காத்திருப்பில் அவருக்கு விரைவான அறுவை சிகிச்சை அவரை கவர்ந்தது. முகமது அப்துல்ரெஹ்மான் கடந்த ஆறு மாதங்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தபோதும், அவருக்கு சில அடிப்படை பரிசோதனைகளில், இருதய ரத்த நாளங்களில் அடைப்புகள் இருப்பதை மட்டுமே கண்றியப்பட்டிருந்தது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அவர் வந்தபின், இருதய சிகிச்சைப் பிரிவு ஆலோசகர் டாக்டர் டிஎம்டி சரவணன், இருதய ரத்த நாளங்களில் பல இடங்களில் மிக மோசமான பல அடைப்புகள் இருப்பதை கண்டுபிடித்து விரைவிலேயே அறுவை சிகிச்சை செய்து கொள்ளமாறு அறிவுறுத்தினார்.

 

கேஎம்சிஎச் இருதய அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் தேவந்திர சிங் கூறுகையில், "இவரது இருதய குழாயில் பல்வேறு இடங்களில் அடைப்புகள் இருந்ததால், இந்த அறுவை சிகிச்சை சவாலாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும் சவாலானது. 

இந்த நிலையில், அறுவை சிகிச்சை குழுவினர் ஒட்டுமொத்த பைபாஸ் ஆபரேஷன் செய்ய முடிவு செய்து ஆபரேஷனை வெற்றிகரமாக செய்தது. இந்த அறுவை சிகிச்சை நீண்ட கால அடிப்படையில் பயனளிக்கும் விதமாக இருக்கும்.

இரண்டு வாரங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகமது அப்துல்ரெஹ்மான் வழக்கமான பணிகளை இன்னும் ஒரு மாத காலத்தி்ற்கு பின் எளிதாக மேற்கொள்ள முடியும்.

இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைகளை சவாலாக கேஎம்சிஎச்-சில் ஏற்று செய்யப்படுவதால், சர்வதேச அளவில் உள்ள நோயாளிகள் இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிச்சாமி, சூடான் நாட்டினருக்கு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் குழுவினரை பாராட்டினார். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், இதற்கான வசதிகள் உள்ளதால் டாக்டர்கள் தன்னம்பிக்கையுடன் சிகிச்சையை மேற்கொள்கின்றனர்," என்றார்.

கேஎம்சிஎச் மருத்துவமனை, இந்த மண்டலத்தில் உள்ள பொதுமக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச அளவிலான நோயாளிகளுக்கும் அவர்களது பயணத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. கோவைக்கு சர்வதேச விமான போக்குவரத்து ஒரு குறையாக இருந்தாலும், கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகளிலிருந்தும் சிகிச்சைக்காக கோவைக்கு வருகின்றனர். குறிப்பாக சூடான், யேமன், ஓமன் நாடுகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...