கோவையில் மறைந்த திமுக பிரமுகர் பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி

துடியலூரில் நடைபெற்ற மறைந்த திமுக பிரமுகர் பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: துடியலூர் பகுதி திமுக முன்னாள் அவைத்தலைவரும்,பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அவைத்தலைவரும்,செயலாளருமாக இருந்த மறைந்த பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

துடியலூர் திமுக மன்றத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் மற்றும் பகுதி கழக செயலாளர் அருள்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பங்காருசாமியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் 100க்கும் மேற்பட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட கழக துணை செயலாளரும் பங்காருசாமியின் பேரனுமான தமிழ் நிதி செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பழனியப்பன், வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...