திருப்பூரில் மாற்றுத்திறனாளி மகனின் வாழ்வாதாரத்துக்காக ஆவின் பால் பூத் அமைக்க உதவிட கோரி ஆட்சியரிடம் தந்தை மனு

காது கேளாத, வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி மகனின் வாழ்வாதாரத்துக்காக நீதிமன்ற வளாகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் பூத் வைக்க உதவி செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.



இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் அவரது இரண்டாவது மகன் அபினேஷ் (19) நூறு சதவீதம் மாற்றுத் திறனாளி ஆவார். இவரின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீதி மன்ற வளாகத்தில் ஆவின் பாலகம் அமைத்துக் கொள்ள உதவிடக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது இரண்டாவது மகன் அபினேஷ் (19) நூறு சதவீதம் மாற்றுத் திறனாளி. அவருக்கு காது கேட்காது. உணவு குழாய் சிறிதாக இருப்பதால் திரவ உணவு மட்டுமே அருந்தி வாழ்ந்து வருகிறார்.

மாற்றுத்திறனாளியான எனது மகனுக்கு தினமும் 250 முதல் 300 செலவாகிறது. எனது மகனுக்கு வாழ்வாதாரம் வேண்டி திருப்பூர் நிதிமன்ற வளாகத்தில் அரசின் உதவியுடன் ஆவின் பாலகத்தை தாங்கள் அமைத்து தர உதவிட வேண்டும்.



மேலும் ஒரு விபத்தில் எனக்கும் கால் முறிந்து விட்டது. எனவே எங்களது மகனின் வாழ்வாதாரத்தை காக்க ஆவின் பாலகம் அமைத்து தர உதவ வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...