பாரதியார் பல்கலையில் 97,123 மாணவர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா


கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் அறிவியல் மருத்துவர், முனைவர், இளநிலை முனைவர், இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட மாணவர்களுககு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கணபதி. முதன்மை விருந்தினராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மேன்மைமிகு விஞ்ஞானி சசிபாலா சிங், பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அர.சுப்பையன் மற்றும் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.

இதில், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கணபதி தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இயலாத தமிழக ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமாகிய வித்யாசாகர் ராவ் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.வி.அன்பழகன் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், தான் பாரதியார் பல்கலைக் கழகத்தின் 10-வது துணைவேந்தராக பதவியேற்ற பின்பு பல்கலைக் கழகத்தின் தரத்தினை இந்திய அளவில் 14-வது இடத்திற்கும், தமிழக அளவில் முதலிடம் பிடித்ததையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மேலும், என்ஏஏசி கமிட்டியின் "ஏ" சான்றிதழ் பெற்றதையும், ஆராய்ச்சி பணிகளில் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பையும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளையும் குறிப்பிட்டார்.



இதைத்தொடர்ந்து பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் (டிஆர்டீஓ) தலைமை இயக்குநர் சசிபாலா சிங், பட்டங்கள் பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், உலகிலேயே இந்தியாவில் தான் 15-30 வயது வரை 40 சதவிகிதம் இளைஞர்கள் உள்ளனர். தற்போது இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகள் பட்டியலுக்கு வேகமாக முன்னேறி வருகிறது. 20-ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானது என்று குறிப்பிட்டார்.

மேலும், இயற்கை பேரிடர்களில் சிக்கும் ராணுவ வீர்ர்களை மீட்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் முன்னாள் துணை வேந்தர் சுப்பையன் முதலில் அறிவியல் மருத்துவர் பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் 3 அறிவியல் மருத்துவர் பட்டங்கள், 1020 முனைவர் பட்டங்கள், 2250 இள முனைவர் பட்டங்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் என மொத்தம் 97123 பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர் சபன் பரீத் பொருளாதாரவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...