கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் முறைகேடு - முன்னாள் காவலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

புலியகுளம் விநாயகர் கோவிலில் பூஜை பொருட்கள், பால், அர்ச்சனை சீட்டு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாகவும், கோவில் நிர்வாகிகள் பக்தர்களிடம் வெளிப்படையாக பணம் வாங்குவதாகவும் முன்னாள் காவலாளி குமரேசன் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக புலியகுளம் விநாயகர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில்காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் குமரேசன்.



இந்நிலையில் அவர் புலியகுளம் விநாயகர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.



அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவிலில் பூஜை பொருட்கள் வாங்குவது, பால் அபிஷேசகத்திற்காக பால் வாங்குவது, அர்ச்சனை சீட்டு வழங்குவது, போன்றவற்றில் முறைகேடு நடக்கிறது.

கோவில் நிர்வாகிகள் பக்தர்களிடம் வெளிப்படையாக பணம் வாங்குகின்றனர். விஐபிக்களுக்கு மட்டும் தீபாராதனை காட்டப்படுகிறது. இதனை கோவில் தலைவர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்.

இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...

அமராவதி அணை நீர்மட்டம் 48.07 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 29.59 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 11ஆம் தேதி நிலவரப்படி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நிலவரம்

கோவை மாவட்டத்தில் ஜூலை 11 நிலவரப்படி ஆழியாறு அணையில் 55.4 அடி, பரம்பிக்குளம் அணையில் 18.24 அடி, சோலையாறு அணையில் 91.21 அ...

கோவையில் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவுக்கு இறுதி வாய்ப்பு; ஜூலை 31-க்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தல்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3.97 லட்சம் பயனாளிகள் ரேசன் அட்டைகளில் கைரேகை பதிவு செய்யாமல் நிலுவையில் உள்ளனர். ஜூலை 31, 20...