பல்லடத்தில் கைது செய்ய சென்ற உதவி ஆய்வாளரின் கையை கடித்த குற்றவாளியால் பரபரப்பு

பல்லடம் அறிவொளி நகரில் கைது செய்ய சென்ற இடத்தில் குற்றவாளி கடித்ததால் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வருபவர் பாபா பஹ்ரூதீன். இவருக்குமனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாபா பஹ்ரூதீனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே மனைவி வேலை செய்யும் பனியன் நிறுவனத்திற்க்கு சென்ற பஹ்ரூதீன் தனது மனைவிக்கு எப்படி வேலை கொடுக்கலாம் என கூறி மேலாளர் சஞ்சய் குமார் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பனியன் நிறுவன மேலாளர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற பல்லடம் போலீசார் பாபா பஹ்ரூதீன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில்பாபா பஹ்ரூதீன் பல்லடத்தை அடுத்தஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்பணியாற்றும்அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்ததகவலையடுத்துபோலீசார் சம்பவ இடத்திற்குசென்றனர்.



அப்போது ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தின் கதவை அடைத்துக் கொண்டு பஹ்ரூதீன் அரை நிர்வாணமாக இருந்துள்ளார். இதனை அடுத்துஉதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கைது நடவடிக்கையில் ஈடுபடும் போதுயாரும் எதிர்பாரத விதமாக பாபா பஹ்ரூதீன் உதவி ஆய்வாளர் கையை பிடித்து கடித்துள்ளார்.

இதனால் உதவி ஆய்வாளர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பஹ்ரூதீனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.குற்றவாளி பஹ்ரூதீன் கடித்ததால் பலத்த காயமடைந்தஉதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...