விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சி பி ஐ எம் கட்சியினர் கைது


விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் காந்திபுரம், சுந்தராபுரம் உள்ளிட்ட பத்து இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதில், காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தலைமையில் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

அப்போது வறட்சி கடுமையாக பாதித்துள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பாலபாரதி குற்றம்சாட்டினார். 

மேலும், தமிழக அரசு செயல்படாமல் இருப்பதாக கூறிய அவர், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினர். 

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 83 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

இதேபோல கோவை மாவட்டத்தில் பத்து இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...