குன்னூரில் தரமான பசுந்தேயிலை விற்பனை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் - வனத்துறை அமைச்சர் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில், தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்து விற்பனை செய்வது தொடர்பாக விவசாயிகள், விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலகத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை அதிகபடியான மக்கள் தேயிலை தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்து, விற்பனை செய்வது தொடர்பாக விவசாயிகள், விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார், மாவட்ட ஆட்சியர் அம்ரித், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர் மோனிகாராணா ஆகியோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:

தேயிலை தொழில் நலிவடைந்து வந்த காரணத்தினால் இது குறித்து கடந்த ஜூலை மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதிக இலாபத்தினை ஈட்டும் வகையில் பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டு, ஆலோசனைகளும் வழங்கட்டதாக கூறினார்.

அதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில் தேயிலைக்கு 12.82 ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் 14.38 ரூபாயும், செப்டம்பர் மாதத்தில் 15.82 ரூபாயும், அக்டோபர் மாதத்தில் 16.21 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிப்படியாக தேயிலைக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் ராமச்சந்திரன், விவசாயிகள் தரமான தேயிலைகளை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தரமான தேயிலை மூலமாக தரமான தேயிலை தூள் தயாரித்து விற்பனை செய்ய முடியும் என தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், இண்ட்கோ சர்வ் பொது மேலாளர் குமரகுருபன், துணை பொது மேலாளர்கள் சங்கர நாராயணன், தேயிலை விற்பனையாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...