கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளை ஆய்வு செய்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார்

கோவை - மேட்டுப்பாளையம் சாலை ஜி.என்.மில்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆய்வு செய்து, சாலை செப்பனிடும் பணிகள் குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலம் சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.



இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் ஜி.என். மில்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, மேம்பால பணிகளையும் அங்குள்ள சாலைகளையும், பாதசாரிகள் பயன்படுத்தும் நடைமேடைகளையும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் சாலைகள் செப்பனிடும் பணிகள் குறித்தும் பொறியாளர்களிடம் கலந்தாலோசித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...