ஸ்போக்கன் டுட்டோரியல் என்னும் திட்டத்திற்கு ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மும்பை ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஐஐடி மும்பையினுடைய ஸ்போக்கன் டுட்டோரியல் என்னும் திட்டத்திற்கு கோவை பகுதியின் ஆதார மையமாக ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி செயல்படும். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் கையெழுத்திடப்பட்டது.



ஐஐடி மும்பையைச் சேர்ந்த ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முகமது காசிம்கான் இந்த ஒப்பந்தத்தில் ஐஐடியின் சார்பாக கையெழுத்திட்டார். ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தரராமன் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 

இந்நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் ஆசிரியர்களும், மாணவர்களும் ஓப்பன் ஸ்சோர்ஸ் மென்பொருள் பயன்படுத்துவது குறித்து ஐஐடி மும்மை பேராசிரியர்கள் பயிற்சியளிப்பார்கள்.

மேலும், ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்போக்கன் டுட்டோரியல் திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி தொடர்ந்து அதுகுறித்த நடவடிக்கைகளை செயல்படுத்தி வருவர்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...