ஒயிலாட்டத்தை மீட்டெடுக்கும் நிகழ்ச்சியில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய கோவை மாவட்ட ஆட்சியர்..!

சூலூரில் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பம்பை அடித்து உற்சாகத்துடன் ஒயிலாட்டம் ஆடிய கோவை ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பார்வையாளர்களை ஆச்சிர்யத்தில் ஆழ்த்தினார். நிகழ்ச்சியில், கவுமார மட ஆலய ஆதீனம் குருமரகுருபர சாமிகள், சூலூர் தொகுதி எம்எல்ஏ கந்தசாமி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் பாரம்பரிய ஒயிலாட்டத்தை மீட்டெடுக்கும் விதமாக ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி எஸ். சமீரன், கவுமார மட ஆலய ஆதீனம் குருமரகுருபர சாமிகள், சூலூர் தொகுதி எம்எல்ஏ கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒயிலாட்ட அரங்கேற்றத்தை தொடங்கி வைத்தனர்.



இதில் பல்வேறு ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் ஆகியோர் நடனம் ஆடினர் காண்போரை வியப்பில் ஆழ்த்தினார். ஆரம்பம் முதலே நடனத்தை ரசித்த கோவை மாவட்ட ஆட்சியர், ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து நடனத்தை குறித்து கேட்டறிந்து, பம்பை அடித்து ஒயிலாட்டம் ஆடினார்.



ஒயிலாட்டக் கலைஞர்களுடன் ஆட்சியர் ஒன்று சேர்ந்து நடனமாடியது அங்கிருந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.



இது குறித்து ஒயிலாட்ட பயிற்சியாளரும் அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான கனகராஜ் கூறுகையில், பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமம் தோறும் இலவசமாக ஒயிலாட்டம், காவடியாட்டம் கற்றுக் கொடுத்து வருகிறோம்.

கிராமிய கலைகளை பயிலும் இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்க வேண்டும்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் கூறுகையில் வீட்டிலேயே முடங்கி இருந்த தங்களுக்கு இது போன்ற பயிற்சி மிகவும் உற்சாகத்தையும் மன வலிமையும் தருவதாக உள்ளது என்றனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...