வேளாண் பல்கலையில் மாபெரும் வேளாண் விழிப்புணர்வு விழா


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இளநிலை வேளாண் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘அக்ரோநோவா 17’ பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பழங்கால அரிய வேளாண்பொருட்கள் கொண்ட வேளாண் அறிவியல் கண்காட்சியும், இக்கால வேளாண் தொழில்நுட்ப மாதிரிகளும் பங்கேற்பாளர் பார்வைக்கு வைக்கப்பட இருக்கின்றன. 

மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் மாணவ மாணவியர் அறிவு மற்றும் சிந்தனைத் திறனைத் தூண்டும்விதமாக பற்பல போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதில், பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. 

இதன் ஒரு பகுதியாக வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து விஞ்ஞனிகளை அழைத்து வேளாண் விழிப்புணர்வு பற்றிய சிறப்புரைகளும் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவின் மூலமாக வேளாண்மையின் பழமையினை இளைய சமுதாயத்திற்கு உணர்த்தி அதன் இன்றைய நிலைபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, பங்கேற்கும் ஒவ்வொரு இளைய தலைமுறைக்கும் வேளாண்மை என் தலையாய கடமை என்னும் விதையினை மனதில் ஊன்ற அக்ரோநோவா 17 ஒரு அற ஆயுதமாக செயல்படும் என நம்பப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...