கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்: கோரிக்கைகளை ஒன்றிய பொது நிதியிலிருந்து நிறைவேற்ற வேண்டும் - கவுன்சிலர்கள் கோரிக்கை

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடுதல், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



கோவை: பொள்ளாச்சி சாலையில் உள்ள கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் நாகராணி தலைமையில் ஒன்றிய குழு கவுன்சிலர் கூட்டம் இன்று நடைபெற்றது.



வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம பகுதிகளில் பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும், அங்கன்வாடி கட்டடங்களை மேம்படுத்த வேண்டும், ஒன்றிய கவுன்சிலர்கள் கோரிக்கை வைக்கும் பணிகளை ஒன்றிய பொது நிதியிலிருந்து ஒதுக்கி பணிகளை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Newsletter

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...