செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள்: கோவை கருமத்தம்பட்டியில் மதுபான கடைகளுக்கு நாளை விடுமுறை - தமிழ்நாடு வாணிப கழகம்

சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம் (17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு.



கோவை: கோவை மாவட்டம் சோமனூர் அடுத்த செகுடந்தாளி பகுதியை சேர்ந்தவர் சாதி ஒழிப்பு போராளி முருகேசன். அவர் கடந்த 1999ஆம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து ஆண்டுதோறும் நவம்பர் 17ஆம் தேதி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவரது நினைவு நாளையொட்டி அன்று ஒரு நாள் அப்பகுதியில் செயல்படும் மதுபான கடைகள் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதன்படி செகுடந்தாளி முருகேசன் நினைவு நாளையொட்டி நாளைய தினம்(17.11.2022) கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கோவை தெற்கு மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காரணமாக கருமத்தம்பட்டி பகுதியில் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் 2261, 2270, 1975, 2306, 1821, 1736, 2272 மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு ஒரு நாள் (17.11.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது.

உத்தரவை மீறி செயல்படும் கடை, பணியாளர்கள் மற்றும் மதுக்கூட உரிமதாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு வாணிப கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...