நீலகிரி உதகை அருகே பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1,800 லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 7 ஆண்டுகள் சிறை

பெயர் மாற்று சான்றிதழ் வழங்க ரூ.1800 ரூபாய் லஞ்சம் வாங்கிய கீழ்குந்தா பேரூராட்சி இளநிலை பொறியாளர் ஜெயலட்சுமிக்கு 7 ஆண்டு சிறை மற்றும் ரூ. 3,000 அபராதம் விதித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள பள்ளிமனை கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார். இவர்தனது தொழிலாளர் குடியிருப்புக்கு பெயர் மாற்று சான்றிதழ் வழங்க கோரி கீழ்குந்தா பேரூராட்சியின் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த ஜெயலட்சுமி என்பவரை அணுகியுள்ளார்.

இந்நிலையில் பெயர் மாற்று சான்றிதழ் வழங்குவதற்காக சிவக்குமாரிடம் ஜெயலட்சுமி 1800 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சிவக்குமார் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் தெரிவித்த நிலையில், ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து ஜெயலட்சுமியிடம் கொடுக்க செய்தனர்.

அப்போது மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக ஜெயலட்சுமியை பிடித்து கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு விசாரணை உதகையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீதரன், லஞ்சம் கேட்டதற்காக 3 ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், லஞ்சம் பெற்றதற்காக 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என மொத்தம் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமாகவிதித்து தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து,இளநிலை பொறியாளரான 60 வயதான ஜெயலட்சுமி, கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...