தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திருப்பி கிடைக்காததால் விரக்தி - கோவையில் தாய்,மகள் தற்கொலை செய்த சோகம்

சூலூரில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி வட்டிக்கு விட்ட பணம் திரும்பி கிடைக்காத விரக்தியில் தாய்,மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கோவை: சூலூர் அருகே உள்ள அம்மாள் கோவில் பிள்ளையார் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் காந்தரூபன்.ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அவர் தான் ஏற்கனவே வசித்த பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளிக்கு நடத்திய சீட்டில் கிடைக்க பெற்ற பணத்தை காந்தரூபனின் மனைவி பழனியம்மாள் வட்டிக்கு விட்டதாக கூறப்படுகிறது. அந்த பணம் தீபாவளி சமயத்தில் திரும்ப கிடைக்காத காரணத்தினால் சீட்டு போட்ட அனைவரும் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

இதனால் மனவேதனையில் மூவரும் இருந்ததாக கூறப்படுகிறது.பணம் கொடுத்தவர்கள் திரும்ப கேட்டுக் நச்சரித்து வந்ததால், விரக்தி அடைந்த காந்தரூபன் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.



இதில் மனைவி, மகள் பரிதாபமாக உயிரிழக்க, காந்தரூபன் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...