இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இனமக்கள் தங்களுக்கு அரசின் இலவச மனை வழங்கும் திட்டத்தின் மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



கோவை: கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த நரிகுறவர் இன மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இதுதொடர்பாக நரிக்குறவர் இன மக்கள் அளித்த மனுவில், 35 ஆண்டுகளாக சுண்டக்காமுத்தூர் எம்ஜிஆர் தோட்டம் பகுதியில் உள்ள கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் இங்கு இருப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வசித்தால் தங்களுக்கும் அங்குள்ளவர்களுக்கும் இடையூறாக இருக்குமென்பதால் தங்களுக்கு தனி மனை இடம் ஒதுக்கித் தர வேண்டும்.



சுமார் 35 குடும்பங்கள் மனை இன்றி வாழ்ந்து வருவதால் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மனை வழங்கும் திட்டத்தின் கீழ் தங்களுக்கும் இலவச மனை ஒதுக்கி தர வேண்டும்.



இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...