கோவை நகரின் பருவநிலை மாற்ற பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான கருத்தரங்கு

கோவை நகரின் பருவநிலை மாற்றப்‌ பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான கருத்தரங்கை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை பந்தப சாலையிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நகர காலநிலை மாற்றம்‌ தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. மத்திய அரசின்‌ வீட்டுவசதி மற்றும்‌ நகர்ப்புற விவாக அமைச்சகம்‌ உருவாக்கிய Climate Smart City Assessment Framework என்ற திட்டத்தின்கீழ்‌, கோவை நகரின் காலநிலையைத்‌ பாதுகாக்கும் நடவடிக்கைகளை செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகம்‌ மேற்கொண்டுள்ள முயற்சிகளின்‌ விரிவாக்கமாக இந்த கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.



கோவை நகரம் எதிர்கொண்டு வரும் காலநிலை மாற்றப்‌ பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு இந்த கருத்தரங்கம்‌ பயனுள்ள வகையில் அமைந்தது.



கருத்தரங்கில் உரையாற்றிய கோவை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப், தமிழகத்தில்‌ உள்ள அனைத்து நகரங்களும்‌ காலநிலை மாறுபாடுகளை எதிர்கொள்வதாகவும், அதன்‌ தாக்கங்கள்‌ தற்போது நகரங்களில்‌ பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறினார். பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ள இது செயல்பட வேண்டிய நேரம்‌ என்றும்‌ குறிப்பிட்டார்.



இந்த கருத்தரங்கில் மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, தமிழ்நாடு நகர்ப்புற ஆய்வுகள்‌ நிறுவன இணை இயக்குநர் சரஸ்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய கண்காணிப்பு பொறியாளர்‌ செந்தில்குமார்‌, நிர்வாக பொறியாளர்‌ லட்சுமணன்‌, துணை திட்ட அலுவலர்‌ செபாஸ்டின்‌, நகாப்புற மண்டல மேலாண்மை ஆலோசகா்‌ லிஜீ, மற்றும் கோவையில்‌ உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள்‌, அரசு சாரா நிறுவனங்கள்‌, கல்வியாளர்கள்‌, வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு மின்சார வாரியம்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியம்‌, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்‌, வனத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை சோந்த 50-க்கும்‌ மேற்பட்ட உறுப்பினர்கள்‌ பங்கேற்றனர்.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...