காற்றாலை மூலம் கடந்த 8 மாதத்தில் 10,000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி - காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம்

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை 10,000 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது என இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்.


கோவை: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது, மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காதது உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை சூரிய ஒரி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே மத்திய மற்றும் மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 8,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை காற்று பருவகாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தின் தினசரி மொத்த மின்தேவையில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிக அதிகம் பங்களிக்கும்.

இதுதொடர்பாக இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது,

கடந்த காலங்கள் போல் இல்லாமல் இன்று காற்றாலை, சூரியஒளி உள்ளிட்ட ஆற்றல் உற்பத்தித்துறை மீது மக்கள் அதிக விழிப்புணர்வு பெற்றுள்ளனர். எதிர்வரும் காலங்களில் மின்தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கும்.

இந்த ஆண்டு காற்று பருவகாலம் மார்ச் 15ஆம் தேதி தொடங்கி, அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு காற்று பருவ காலத்தில் மொத்தம் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மின்சாரத்தை வீணடிக்காமல் தமிழக மின்வாரியம் உரிய முறையில் பெற்றுக் கொண்டது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பெறப்பட்ட மின்சாரத்துக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகை, இதுவரை இரண்டு தவணைகளாக மின் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள தொகையும் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...