திருப்பூரில் கிரிண்டர் (Grindr) எனும் செல்போன் செயலி மூலம் ரூ.90,000 வழிப்பறி; மூவர் கைது

திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிரிண்டர் செயலி மூலம் ஒருவரை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூரில் கிரிண்டர் எனும் செல்போன் செயலி மூலம் வழிபறியில் ஈடுபட்ட மூன்று பேரை திருமுருகன்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கிரிண்டர் ஆப் எனும் செல்போன் செயலி மூலம் அவர்களது செல்போன் எண்ணில் தொடர்பு அவர்களை நேரில் வரவழைத்து வழிப்பறியில் ஈடுபடும்.சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி அம்மாபாளையம் முதல் வீதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது செல்போனில் கிரிண்டர் செயலி மூலம் சில அடையாளம் தெரியாத நபர்கள் அறிமுகம் ஆகியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் கூறிய இடத்திற்கு கார்த்திக் சென்றபோது அங்கிருந்த கிஷோர் குமார், தனபால், சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கார்த்திக்கை மிரட்டி அவரிடம் இருந்து 90 ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து, திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் மூவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காவலர் தினம்: கோவை காவல்துறை அருங்காட்சியகத்தில் செப். 6-ல் இலவச அனுமதி

வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ள...

கோவை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனையா?

முக்கிய அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில், பயணி போல் அமர்ந்திருந்த நபர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...