கோவை உக்கடம் அருகே பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்பு

கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் ஐம்பொன் முருகன் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு வந்த தகவலின்படி விசாரணை ஆனது நடைபெற்று வருகிறது.



கோவை: கோவை உக்கடம் – செல்வபுரம் நெடுஞ்சாலையில் உள்ள பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் இருந்து 4 அடி ஐம்பொன் முருகன் சிலை மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஸ்கரன் சுவாமி என்பவரது வீட்டில் கோவில் சிலை உள்ளதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட போலீஸார், அவரது வீட்டில் சோதனையிட்டனர்.



சுமார் 3 மணி நேர சோதனையின் போது வீட்டில் இருந்த சுமார் 4 அடியுள்ள ஐம்பொன் முருகன் சிலை இருந்தது தெரியவந்தது.



அந்த சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் பாஸ்கரன் சுவாமி, தான் சிலை செய்யும் பணிகளை செய்து வருவதாகவும், வீட்டில் கண்டறியப்பட்ட சிலையும் அவரே செய்த சிலை என தெரிவித்ததாகவும், இது குறித்த விடியோவையும் போலீசாரிடம் காட்டியதாக தெரிகிறது.



இருப்பினும், சிலையின் பழமை தன்மை மற்றும் மற்ற விவரங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....