பால் கொள்முதல் விலையை 10சதவீதம் உயர்த்த வலியுறுத்தி கோவையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தீவனங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை 10 சதவீதம் உயர்த்த வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.



கோவை: பசும் பால் மற்றும் எருமை பால் விலையை உயர்த்தி தமிழக அரசு நேற்றைய தினம் (03.11.2022) அறிவித்தது. அதன் படி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.32 லிருந்து ரூ.35 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல் எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.41 லிருந்து ரூ.44 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில் பால் கொள்முதல் விலையை 10 சதவீதம் உயர்த்த வலியுறுத்தி, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாடுகளுக்கு கொடுக்கப்படும் தீவனமான தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் உள்ளிட்டவை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பாலின் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 சதவீதம் உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் பால் விலை உயர்வு தொடர்பாக முதலமைச்சர் பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...