கோவை சி.எஸ்.ஐ கல்வி நிறுவங்களின் புதிய கல்விக்குழு கன்வீனர் தேர்வு


சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்தின் கீழ் பொறியியல் கல்லூரிகள், பட்டையைப் படிப்பு கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகள், பள்ளிகள் என இருநூற்றுக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை நிறுவகிப்பதற்கான கூட்டுக் குழு கன்வீனர் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும். அதன்படி கடந்த 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சி.எஸ்.ஐ. திருமண்டலப் பேரவைத் தேர்தலில் கல்விக்குழு கன்வீனராக டாக்டர். ஏ.சந்திரன் தேர்வு செயப்பட்டார். 

கோவை பந்தைய சாலையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு பேராயர் திமோத்தி ரவீந்தர், செயலாளர் பால்செல்வின் பிரபுதாஸ் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துக் கூறினார். பதவி ஏற்றுக் கொண்ட பின்பு, செய்தி வெளியிட்டுள்ள கன்வீனர் டாக்டர் ஏ.சந்திரன் தற்போது கல்விக்கும் வேலை வாய்ப்பிற்கும் இடையில் நிறைய இடைவெளி உள்ளது. கல்வி முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளது. வரும் 2020ம் ஆண்டில் படித்து வெளியில் வரும் மாணவர்களில் 27 சதம் பேர்களுக்கு மட்டுமே வேலை கிடைக்கு என்று ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. எனவே, சி.எஸ்.ஐ. கல்வி நிறுவங்களில் மாணவர்களுக்கு கல்வியுடன், வேலை வாய்ப்பை பெறுவதற்கான தகுதி பயிற்சியும், மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...