கோவை கோட்டை மேடு சுற்றுவட்டார பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 30 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

கோவை கார் வெடிப்பு சம்பவம் பிறகு தீவிர கண்காணிப்பில் இறங்கிய போலீஸார்கள் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு மேலாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோட்டை மேடு கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த 23 ஆம் தேதி கார் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில்,மேலும் 6 பேரை போலீசார் கைது செய்து உபா சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர்.

உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து வெடி பொருட்கள், சதி திட்டம் குறித்தான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மாநகரில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்ட கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இன்று காலை முதல் உக்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



அதில் ஒர்ஷாப் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற போலீசார் எச்சரித்தனர்.



ஆனால் அதையும் மீறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் தொடர்ந்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...