இந்தி திணிப்புக்கு எதிராக பல்லடம் தபால் நிலையம் முற்றுகை - இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போராட்டம்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் SFI மற்றும் DYFI சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் தபால் நிலைய அலுவலகத்தை இரண்டு அமைப்பினரும் முற்றுகையிட்டு, கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசாங்கத்தின் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட இந்திய மாணவர் சங்கம் (SFI), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) தமிழ்நாடு மாநில குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.



அதன் அடிப்படையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் திருப்பூர் மாவட்ட குழுக்கள் சார்பில் பல்லடம் தபால் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் அருள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கம் மாவட்ட தலைவர் தோழர்.பிரவீன் குமார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாநில துணை தலைவர் தோழர்.மணிகண்டன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினர் தோழர்.சௌந்தர்யா, இந்திய மாணவர் சங்க மாநில குழு உறுப்பினர் ஷாலினி உள்ளிட்ட மாணவர் வாலிபர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் என 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

என்.ஜீ.ஆர் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து தபால் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, இந்தி திணிப்பிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியது மட்டுமல்லாமல், மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...