தேசிய மருத்துவ பதிவேடு குறித்த கருத்தரங்கம் கோவையில் நாளை நடக்கிறது

குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் மெட்ரெகான் எனும் பெயரில் 17வது ஆண்டு தேசிய மருத்துவ பதிவேடு குறித்த கருத்தரங்கம் வரும் நாளை சனிக்கிழமை 4ம் தேதி தொடங்குகிறது. 

இதுகுறித்து மருத்து பதிவேட்டு துறையின் தலைவர் தெய்வசீலி கிருபாகரன் கூறியதாவது, குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அதிக அளவிலான மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கி உள்ளது. இதுவரை சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வெளிநோயாளிகள் மற்றும் 60 ஆயிரம் உள்நோயாளிகள் பற்றிய தகவல்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2005ம் ஆண்டு முதல் மருத்துவமனையில் மருத்துவ பதிவேடுகளை கணினி மயமாக்கியதன் மூலம் அதிக அளவிலான காகிதங்களை சேர்க்கப்படுவது தவிர்க்கப்பட்டு சிறப்பான சேவை செய்ய இந்த முறை தொடங்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளின் படி சர்வதேச நோய்களின் வகைப்பாடு 10 முறைப்படி மருத்துவ பதிவேடு அனைத்தும் பதிவு செய்யப்படுகிறது. மெமரி சிப் மூலம் நோயாளிகளின் முழு மருத்துவ தகவல்களும் பெயர் வரிசையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு, இந்தியாவில் இருந்து 400க்கும் மேற்பட்டவர்கள் கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர் என்றார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...