கோவையில் வரும் அக்.28 முதல் ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்த முடிவு - பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல்

கோவை பால் கொள்முதல் விலை உயர்வு,ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.28 ஆம் தேதி முதல் ஆவினுக்கு வழங்கப்படும் பால் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.



கோவை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் கோவை, திருப்பூர் மாவட்ட உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டம் கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு பால் உற்பத்தி செய்து கொடுத்து வரும் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.42, எருமை பாலுக்கு ரூ.51 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

ஏற்கனவே மாநில நிர்வாகிகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இதுவரை முடிவு எடுக்கப்படாததால், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் ஆவினுக்கு வழங்கப்படும் பால் விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தனியார் பால் நிறுவனங்கள் அதிக விலைக்கு பால் கொள்முதல் செய்து வருவதால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்திற்கு பாலை விற்பனை செய்து வருகின்றனர். ஆவின் நிறுவனம் விலையை உயர்த்தாததால் மேலும் சிலரும் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...