கேஎம்சிஎச் மருத்துவமனையின் சார்பில் உலக புற்றுநோய் தினம் அனுசரிப்பு


உலகம் முழுவதும் பிப்ரவரி 4ம் தேதியன்று யூனியன் ஆப் இன்டர்நேசனல் கேன்சர் கன்ரோல் என்ற அமைப்பினால் உலக புற்றுநோய் தினம் அனசரிக்கப்படுகிறது.

இதைமுன்னிட்டு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனையில் கையெழுத்து இயக்கம் இன்று நடத்தப்பட்டது. மேலும், இதன் ஒரு பகுதியாக உடல் பரிசோதனைக்கான புதிய திட்டம் ரூபாய் 999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கையெழுத்து இயக்கத்தை கேஎம்சிஎச் இயக்குநர் டாக்டர் அருன் பழனிசாமியுடன் இணைந்து கோவை நகர போக்குவரத்து இணை ஆணையர் எஸ்.சரவணன் இந்த கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.

இதய நோய்களுக்குப் பிறகு புற்றுநோயே மனிதர்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. உலக அளவில் புற்றுநோயால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போல இந்தியாவிலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 18 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. புற்றுநோயால் பதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அடுத்து வரும் 5 முதல் 10 வருடங்களில் இரட்டிப்பாகும் என கருதப்படுகிறது.

புற்றுறோயை கண்டறிவது, அதற்கு சிகிச்சை அளிப்பது ஆகிய துறைகள் மிகவும் வளர்ச்சியடைந்து விட்டது. தற்போதைய காலகட்டத்தில் 50 சதவிகித புற்றுநோயாளிகள் குணமடைகிறார்கள். இது 1970-களில் 25 சதவிகிதமாக இருந்தது.

புற்றுநோயை குணப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அனைத்துவிதமான புற்றுநோய்களும் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் குணமடைய வாய்ப்புள்ளது.

புற்றுநோயின் சிகிச்சையானது அறுவை சிகிச்சை, ரேடியோ தெரபி, கீமோ தெரபி உள்ளிட்ட மூன்றுவிதமாக சிகிச்சைகளை உள்ளடக்கியது. இவ்வனைத்துவிதமான சிகிச்சைகளும் இன்று மிகவும் முன்னேறியுள்ளது. இதனால், புற்றுநோயை மிகவும் துள்ளியமாகவும், பாதுகாப்பான முறையிலும் குணமாக்க முடியும்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...