மது மற்றும் கள்ளச்சாராயம் குறித்து கோவையில் விழிப்புணர்வு பேரணி



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (03.02.2017) தமிழக அரசின் உத்தரவுப்படி மாவட்ட கலால் துறை மூலம் மதுப்பழக்கம் மற்றும் கள்ளச்சாரயத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இப்பேரணி காவல் ஆணையர் அலுவலகம் வழியாக வ.உ.சி மைதானம் வரை சென்றடைந்தது. 

இப்பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கள்ளச்சாராய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், விழிப்புணர்வு வாசகங்களை கூறியபடியும் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் சென்றனர். 

முன்னதாக கிராமிய கலைஞர்களின் விழிப்புணர்வு வீதி நாடகமும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பின்னர், வ.உ.சி மைதானத்தில் மாணவ மாணவியர்களுக்கு மதுவினால் உடலில் உண்டாகும் தீமைகள் குறித்தும் மருத்துவர்களால் விளக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து மருத்துவ முகாம்களும் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் (கலால்) து.வெங்கடேசன், மாவட்டட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) நூர்முகம்மது, கோட்ட கலால் அலுவலர்கள் ஜெயசித்ரா, ருக்மணி பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...