மூன்று மாதத்திற்குள் நம் நகரத்தில் மாதிரி சாலை அமைக்கும் பணியில் கோவை மாநகராட்சி தீவிரம்


கோவை மாநகராட்சி மூன்று மாதங்களில் மாதிரி சாலைகளுக்கான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நமக்குக்கிடைத்த தகவலின்படி கோவை மாநகராட்சி பி.எஸ்.என்.எல் மற்றும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் இணைந்து ஆர்.எஸ்.புரத்தில் உள்ள டி.பி. சாலை, டி.வி.சுவாமி சாலை ஆகிய பகுதிகளில் இந்த மாதிரி சாலைகளை அமைக்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது.

இந்த பணியின் போது மின்சாரம் மற்றும் தொலைபேசி வடங்கள் நேர்கோட்டில் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

கோவை மாநகராட்சி, இன்ஸ்டியூட் ஃபார் டிரேன்ஸ்பர்டேஷன் அன்டு டெவலப்மென்ட் பாலிசியுடன் இணைந்து டி.பி.சாலையில் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கும், டி.வி.சுவாமி சாலையில் 1.20 கிலோ மீட்டர் தூரத்திற்கும் இந்த மாதிரி சாலைகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பணியின் போது சாலையோரத்தில் உள்ள மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களை நிலத்தடியில் பதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், ஒரே மாதிரியான தகவல் பலகைகளையும், மற்றும் போக்குவரத்து சந்திப்புகளையும் ஒரேமாதிரியாக வடிவமைத்து வாகனங்கள் எளிதாக திரும்புவதற்கு வழிவகை செய்யப்பட்டு வருகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...