வன விலங்குகளை தாக்க வேண்டாம் என நீலகிரி மக்களுக்கு வன அதிகாரிகள் வேண்டுகோள்



நீலகிரி மாவட்டம் குன்னூர் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சவுந்தரராஜன், பாபு, விக்ரம், மணிகன்டன் ஆகியோர் இன்று வனவிலங்குகளை தாக்கக் கூடாது என பொதுமக்களுக்கு விழப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வின் போது பொது மக்களுக்கு தண்டோரா மூலம் குடியிருப்பு பகுதிக்கு வரும் வன விலங்குகளான கரடி, காட்டுமாடு, சிறுத்தை, யானை போன்றவற்றை விரட்டவோ, அவற்றை கற்கள், நெருப்பு மற்றும் கட்டைகள் கொண்டு தாக்கவோ கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும், வன விலங்குகள் ஊருக்குள் வந்தால் வனத்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் என்னும் பகுதியில் உள்ள மயானத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது.



மேலும், கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் குன்னூர் பகுதியில் காட்டு எருமை தாக்கியதில் ஒருவர் பலியானார்.

இவ்வாறு குன்னூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு விலங்குகளின் தாக்குதலால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதையொட்டி மனித- விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த வேண்டும். வனத்துறையினர் காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது வனத்துறையினர் காட்டு விலங்குகளை கண்டால் தாக்கக் கூடாது என அறிவித்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...