கோவையில் வாடகைக் கார் சேவையினை அறிமுகம் செய்த ஜும்கார் நிறுவனம்


ஜும்கார் என்ற நிறுவனம் புதுமையான திட்டத்தில் வாடகை கார் சேவையினை கோவையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் வாடகைக்கு கார் எடுக்கும்பொழுது மற்ற நிறுவனங்களில் காருடன் ஓட்டுநரையும் அனுப்புவதைப்போல் அல்லாமல் ஒரு சில நிபந்தனைகளுடன் தனி நபரே காரினை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம்.



இத்தியா முழுக்க இந்நிறுவனம் 2600 கார்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி க்ரேக் மொரன் கூறுகையில், கோவையில் எங்கள் சேவையினை அறிமுகம் செய்வதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இந்த சேவையின் மூலம் நகர மக்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற முறையில் வாடகைக்கு கார் சேவையினை வழங்க உள்ளோம்.



இது கார் சொந்தமாக வைத்திருப்பதற்கு இது ஒரு மாற்றாக இருக்கும். இது மக்களின் தனிப்பட்ட பயணத் தேவைகள் குறித்தான ஒரு புதிய பார்வையை உருவாக்கும். இந்த சேவையினை அறிமுகம் செய்வதன் மூலம் தொழில்நுட்பம் எப்படி நமது நகரங்களை மாற்றும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. நாம் தற்பொழுது இந்த நாட்டில் அடிப்படையான ஒரு மாற்றத்தை நோக்கி பயணித்து வருகிறோம்' என்றார்.

மேலும் ஜும்கார் வீட்டிற்கே காரை அனுப்பும் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளரின் இடத்திற்கே காரினை கொண்டுவந்து சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...