பிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்து லட்சுமி விலாஷ் வங்கி புதிய செயலி அறிமுகம்


லட்சுமி விலாஷ் வங்கி மிசன் பின்பிட் என்னும் ஒரு புதிய ஸ்மார்ட் போன்களுக்கான செயலியை பிஸ்டம் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது. 

இந்த செயலி மூலம் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மூலதனத் திட்டங்களை வழங்க உள்ளது. மேலும் தனிமனித சொத்து நிர்வாகத்திற்கான சேவைகளையும் இதன் மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தங்கள் முதலீடுகளை இந்த செயலியின் மூலம் லட்சுமி விலாஷ் வங்கியின் வாடிக்கையாளர்கள் எழிதாக மேற்கொள்ளலாம்.

இதுகுறித்து லட்சுமி விலாஷ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பார்த்தசாரதி முகர்ஜி கூறியதாவது:-

லட்சுமி விலாஷ் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தங்களது முதலீடுகளை கையாலுவதற்கு இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் முதலீடுகளை எழிதாக மேற்கொள்ளலாம். இந்த செயலியானது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் மொபைல் வேலட்டாகவும் செயல்படும். வங்கி மற்றும் இந்த சேவையில் எங்களின் சேவைகளை விரிவாக்குவதற்கு இந்த செயலி மிகவும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.

லட்சுமி விலாஷ் வங்கியின் சில்லரை வங்கி பிரிவின் தலைவர் ஏ.ஜே.வித்யாசாகர் கூறுகையில், பண பர்வர்த்தனையின் எதிர்காலம் என்பது டிஜிட்டல் முறையிலேயே நடக்கும். இதைக் கருத்தில் கொண்டு எங்கள் வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காக இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது. நாங்கள் சமீபத்தில் எங்களுடைய மொபைல் போனுக்கான செயலியை அறிமுகம் செய்தோம். அது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பிஸ்டம் உடன் இணைந்து செயல்படுவது மூலம் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவைகளை மேம்படுத்த முடியும். பிஸ்டம் நிறுவனம் எங்களுடைய இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றி வருகிறது" என்றார்.

பிஸ்டம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான சுப்ரமண்யா எஸ்.வி கூறுகையில், லட்சுமி விலாஷ் வங்கியுடன் இணைந்து மிஷன் பின்பிட்டை வழங்குவதில் நாங்கள் மிகவும் பெருமிதம் அடைகிறோம். இந்த சேவை நாடுமுழுவதும் 30 லட்சம் வாடிக்கையாளர்களை சென்றடைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

எங்களுடைய நிறுவனம் புதிய நிறுவனமாக இருந்தாலும் லட்சுமி விலாஷ் வங்கியுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய சாதனையாகும். இதன் மூலம் டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் முதலீடு வாய்ப்புகள் மற்றும் ஆலோசனைகளை எங்கள் வாடிக்கையாளர்களுககு வழங்குவதில் மிகவும் உறுதுணையாக இருக்கும்" என்றார்.

Newsletter

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...