பட்டா வழங்கக் கோரி மேட்டுப்பாளையம் பகுதி மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு


மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் சார்பில் மேட்டுப்பாளையம் சமத்துவக் கழகம் மகளிர் அணி செயலாளர் சித்ரா, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், பெள்ளாதி கிராமம் பகுதியில் உள்ள பஞ்சமி நிலம் சுமார் 4.22 ஏக்கரில் தாழ்த்தப்பட்ட மக்கள் 100 குடும்பம் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.

இப்பகுதியில் பட்டா வழங்கக் கோரி பல முறை வலியுறுத்தி மனு அளித்தும், பல வழிகளில் முயற்சித்தும் பட்டா வழங்கவில்லை.

இப்பகுதியில் இருந்து சுமார் 60 குழந்தைகள் பள்ளிக்குச் செல்கின்றனர். பட்டா இல்லாததால் மின் விளக்கு இன்றி படிக்க முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.

அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, கழிப்பிடம் உள்ளிட்டவை எதுவும் பட்டா இல்லாமல் செய்துகொடுக்க மறுக்கின்றனர்.

எனவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய  நடவடிக்கை மேற்கொண்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...