கனடாவில் பணிபுரிந்து வந்த சகோதரரைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு


கனடாவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தனது சகோதரர் மாயமாகி விட்டதாகவும், இந்திய வெளியுறவுத் துறை மூலம் தனது சகோதரனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை சூலூர் பகுதியை சேர்ந்த அவரது தங்கை மற்றும் தந்தை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரோத்தாஸ் சிங் தாலா. டெல்லியை சேர்ந்த இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவை மாவட்டம் சூலூரில் வசித்து வருகின்றார்.

இவரது இளைய மகன் கார்த்திக் சவுத்ரி (25) மும்பையை சேர்ந்த ஆங்கிலோ ஈஸ்டன் என்ற கப்பல் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றார்.



இந்நிலையில் பணிநிமித்தமாக கனடா சென்ற கார்திக் சவுத்ரி மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. கடைசியாக டிசம்பர் மாதம் குடும்பத்தினருடன் பேசிய கார்த்திக் சவுத்ரி அதன் பின்னர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில், இன்று கார்த்திக் சவுத்ரியின் தந்தை ரோத்தாஸ் சிங் மற்றும் அவரது சகோதரி மீனாட்சி ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் சவுத்தியின் சகோதரி மீனாட்சி, தனது சகோதரன் மாயமானது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறைக்கு இ-மெயில் மூலம் புகார் அளித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனமும் தனது சகோதரன் குறித்து உரிய தகவல் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், சகோதரன் பணிபுரிந்த நிறுவன ஊழியர்கள் திடீரென இறப்பு சான்றிதழ் தரும்படி கேட்பதாகவும் தெரிவித்த அவர், தனது சகோதரன் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை எனவும் எனவே கனடாவில் மாயமான தனது சகோதரனை இந்திய வெளியுறவுத்துறை மூலம் மீட்க மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...